கஞ்சா தோட்டத்தை சுற்றி வளைத்த விஷேட அதிரடிப்படையினர் ஒருவர் கைது
புத்தள விஷேட அதிரடிப்படையினர் தனமல்வில பகுதியில் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சட்ட விரோதமாக பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தோட்டத்தில் சுமார் 5 அடி உயரமான 700 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் அவை அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா தொகை 5 இலட்சம் பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனமல்வில பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தள விஷேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தோட்டத்தில் சுமார் 5 அடி உயரமான 700 கஞ்சா செடிகள் இருந்ததாகவும் அவை அனைத்தையும் அழித்துவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கஞ்சா தொகை 5 இலட்சம் பெறுமதியுடையவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தனமல்வில பகுதியை சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தள விஷேட அதிரடிப்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சா தோட்டத்தை சுற்றி வளைத்த விஷேட அதிரடிப்படையினர் ஒருவர் கைது
Reviewed by Vanni Express News
on
8/08/2018 11:09:00 PM
Rating:
