கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமை காரணமாக ராஜாங்கனை பிரதேசம் மீதி விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகள் இன்று (31) தொடக்கம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
ராஜாங்கனை சுகாதார வைத்திய அலுவலர் பிரிவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டங்களின் கீழ் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவ, லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (31) வெளியிடப்படவுள்ளது.
குறித்த பகுதியில் 325 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் நேற்று (10) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டார்.
இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரே நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.
ராஜாங்கனை சுகாதார வைத்திய அலுவலர் பிரிவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயண கட்டுப்பாடுகளை கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் இரண்டு கட்டங்களின் கீழ் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் இருந்து பல புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டமையினால் ராஜாங்கனை பகுதிக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
எனினும் கடந்த 19ஆம் திகதி முதல் இதுவரை இந்த பிரதேசங்களில் எந்தவொரு தொற்று நோயாளரும் இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ராஜாங்கனை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை கருத்திற் கொண்டே சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக பயணக்கட்டுப்பாடுகள் இன்று காலை முதல் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலன்னறுவ, லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (31) வெளியிடப்படவுள்ளது.
குறித்த பகுதியில் 325 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் நேற்று (10) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டார்.
இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரே நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.