இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் தீபிகா உடுகம பதவியில் இருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) மாலை ஒன்று கூடியது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.
செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அவர் தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்து கொள்வதாக அரசியலமைப்பு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபை இறுதியாக நேற்று (03) மாலை ஒன்று கூடியது.
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்பு சபை ஒன்று கூடி இருந்தது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மஹிந்த சமரசிங்க, பிமல் ரத்நாயக்க ஆகியோர் உட்பட அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் 6 பேர் இதில் கலந்து கொண்டனர்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச இதில் கலந்து கொள்ளவேண்டி இருப்பினும் அவர் சமூகமளிக்கவில்லை.