உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த விடயம் தொடர்பாக இலங்கையும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்று நோய் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விடின் கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அந்தப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமர வீர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற கொரோனா தொற்றை கட் டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலைமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது விடின் கடந்த மாதங்களைப் போன்று மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அந்தப் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமர வீர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியா மற்றும் நியுஸிலாந்து போன்ற கொரோனா தொற்றை கட் டுப்படுத்திய நாடுகளில் கூட மீண்டும் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, ஊரடங்கு வரை செல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்தியாவில் தற்போது வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாகவும் இந்த நிலைமையில் சிறிய தீவான எமது நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.