- க.கிஷாந்தன்
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிகிழமை மதியம் இந்த சடலம் இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கெசல்கமுவ ஓயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால் மேற்படி சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த குடும்பஸ்த்தர் காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு தொழிலுக்காக சென்றதாகவும், சடலமாக மீட்கபட்ட நபர் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவை சேர்ந்த 42வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வெள்ளிகிழமை மதியம் இந்த சடலம் இனங்காணபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கெசல்கமுவ ஓயா பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற நபர் ஒருவரினால் மேற்படி சடலம் மிதந்து கொண்டிருப்பதை இனங்கண்டு பொதுமக்களுக்கு தகவல் வழங்கப்பட்ட பின் பொதுமக்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டமைக்கு அமைய சம்பவ இடத்திற்கு சென்ற நோர்வூட் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த குடும்பஸ்த்தர் காலை 07.30 மணியளவில் வீட்டில் இருந்து தோட்டத்தில் உள்ள உபமின் நிலையத்திற்கு தொழிலுக்காக சென்றதாகவும், சடலமாக மீட்கபட்ட நபர் பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் கீழ்பிரிவை சேர்ந்த 42வயதுடைய ஆறுமுகம் ரவிகுமார் மூன்று பிள்ளைகளின் தந்தையென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மீட்கப்பட்ட சடலம் அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவானினால் மரண விசாரணைகள் இடம்பெற்றவுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.