- விசேட செய்திப்பிரிவு
பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும், கற்பிட்டி பிரதேச செயலாளர் கைதாகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி குறித்த பிரதேச செயலாளர் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமைபுரியும் பெண் கிராம சேவகர் ஒருவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்படி பாலியல் அச்சுறுத்தல் விடுத்ததாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே அவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கற்பிட்டி பிரதேச செயலாளர், புத்தளம் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை, குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு, புத்தளம் மாவட்டச் செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புத்தளம் மாவட்ட தலைவர் சமன் பாலசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS