விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருப்பதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களை எதிர்வரும் 26ஆம் திகதி மீண்டும் திறப்பது தொடர்பில் திட்டவட்டமான முடிவு எட்டப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இருப்பினும் இது தொடர்பில் அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான ஏற்பாடுகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
2020 செப்டம்பர் 01ஆம் திகதி முதல் 2020 டிசம்பர் 16ஆம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீர்வை வரியற்ற வர்த்தக நிலைய தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 16ஆம் திகதி தனிமைப்படுத்தலை நிறைவு செய்கின்ற பயணிகளும், தனிமைப்படுத்தல் செயல்முறை முடிவடைந்து ஒரு மாத காலத்திற்குள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வை வரியற்ற வர்த்தக நிலைய தொகுதிகளில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும்.
COMMENTS