இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது.
01 - தர்கா பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும்
02 - ஹோமாகமை பிரதேசத்தை சேர்ந்த 59வயதுடைய ஆண் ஒருவரும்
03 - கொழும்பு 05 பிரதேசத்தை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரும்
04 - கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும்
05 - பெல்மடுல்ல பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
COMMENTS