அசாதாரண காலநிலையை கருத்திற்கொண்டு நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் PSM சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே புரவி சூறாவளி அச்சுறுத்தல் காரணமாக கடந்த வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் வடமாகாண பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS