தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும், 2020 கல்வி பொதுத்தராதர உயர் தர செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ள, மாணவர்களுக்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாணவர்கள், தமது பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி செயன்முறை பரீட்சைகளில் தோற்றலாமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், தமது பரீட்சை அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கே பரீட்சார்த்திகள் செல்ல வேண்டுமென பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
COMMENTS