இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்துள்ளது.
01 - கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும்.
02 - இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 64 வயது ஆண் ஒருவரும்.
03 - நீர்கொழும்பு சிறைச்சாலையின் 62 வயதுடைய ஆண் கைதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
COMMENTS