கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது குறித்து பரிசீலிக்க நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி உயிரிழக்கும் சடலங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து தகனம் செய்வதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மத, அரசியல், அல்லது பிற காரணங்களுக்காக இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் அறிக்கையொன்றினை நிபுணர் குழு சமீபத்தில் ஒப்படைத்தமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியபோது, அந்த அறிக்கையானது பிரதான குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, தற்போது அது குறித்தான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
வைத்தியர் சன்னா பெரேரா தலைமையிலான குழுவே இதனை தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
மத, அரசியல், அல்லது பிற காரணங்களுக்காக இந்த முடிவு திரும்பப் பெறப்படாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிக்கும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் அறிக்கையொன்றினை நிபுணர் குழு சமீபத்தில் ஒப்படைத்தமை குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியபோது, அந்த அறிக்கையானது பிரதான குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, தற்போது அது குறித்தான எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
வைத்தியர் சன்னா பெரேரா தலைமையிலான குழுவே இதனை தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
COMMENTS