இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது.
01 - வெலிகம பகுதியைச் சேர்ந்த 67 வயதான பெண் ஒருவரும்.
02 - கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒருவரும்.
03 - வத்தேகம பகுதியைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவரும்.
04 - கெலிஓய பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவரும்.
05 - கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 18 மாத ஆண் குழந்தை ஒன்றும்.
06 - ராகமை பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஆண் ஒருவரும்.
07 - நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 968 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
COMMENTS