மாடறுப்பு தடை தொடர்பாக புதிய சட்டத்தை உருவாக்க அரசாங்கம் தற்போது சட்டமா அதிபருடன் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்தார் மற்றும் 2020 செப்டம்பரில் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மாடறுப்பு தடை அடுத்த சில மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட உள்ளது என்று தி மார்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
புத்தசாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனா கூறுகையில், அமைச்சகம் தற்போது சட்டமா அதிபருடன் இறுதி வரைவு குறித்து விவாதித்து வருகிறது.
இறைச்சி நோக்கங்களுக்காக கால்நடை அறுப்புக்கு தடை விதிக்கப்படும். அதேவேளை மாட்டிறைச்சி இறக்குமதி செய்யஅனுமதி அளிக்கப்படும் என்றார்.
முக்கியமாக பால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க கால் நடைகளை அறுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் குணவர்தன வலியுறுத்தினார்.
தற்போது, இறைச்சிக்காக கால்நடைகளை அறுக்கிறவர்கள், பசு மற்றும் கன்றுகளை அறுக்கிறார்கள், இதனால் பால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
வயதான மாடுகளின் பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்படும் என்று கேட்ட போது வயதான மாடுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் உள்ளன என்று பேராசிரியர் குணவர்தனா, கூறினார்.
COMMENTS