இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 05 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 476 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள் -
01 - கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர்.
02 - கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர்.
03 - புலத்கொஹுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 83 வயதான ஆண்ணொருவர்.
04 - கண்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆண்ணொருவர்.
05 - பூஜாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்ணொருவர்.
இதேவேளை இன்றைய தினம் இதுவரையில் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றில் இருந்து இன்றைய தினம் 475 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
COMMENTS